
This was written for Mothers day (9th May 2010)
என் அருகில் இருந்துக்கொண்டே
தியாகி என்றோ,
கடவுள் என்றோ
அதற்கும் மேலே என்றோ
இவ்வுலகம் முழுவதும் உனக்கு பெயர் உண்டு
ஆனால் அம்மா
நீ எனக்கு
என் இரு கைகள் போல!
கைகொடுப்பாய்
என் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்துக்கொண்டே
உன் அருகில் இருந்துக்கொண்டே
பசி தூக்கம் மறந்து
உன் மடியில் படுத்து
விடிகிறன என்னுடைய
குழந்தை பருவத்தின் காலைகள்
இனியும் விடியும்
இதற்கு பிறகு வரக்கூடிய
இனிய பருவத்தின் காலைகளும்
