Sunday, April 4, 2010
வீடு
கதவை ஒருமுறை தட்டினான். மீண்டும் மீண்டும் கைவலிக்கும் வரை தட்டினான். உடலை சுட்டரிக்கும் ஜுன் மாத வையிலில் தன்னை வாசப்படியில் நிற்க வைத்த அவன் அம்மாவை பார்த்து முறைத்தான் இந்த கொடுமையான வெயிலில் அவனை நிற்க வைக்க அவருக்கு எப்படி மனம் வந்தது. மீண்டும் கதவை தட்டினான். 'ஏன் சாகர் கதவை தட்டிகிட்டை இருக்கிறாய் .உனக்கு கொஞ்சம் கூட பொருமையே இல்லை. சரி வா', என்று அவனை அலட்சியமாக வீட்டினுள் வரவேற்றாள், லட்சமி. வீட்டினுள் செல்ல அவனுக்கு ஏற்பட்ட துடிப்பு எதனால் விளைந்தது என்பதை அவனால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. வீட்டின் உள்ளே சென்றவுடன் ஒரு செளகரியமான இடத்தை அடைந்ததுப்போல் ஒர் உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. அளவிடமுடியாத மகிழ்ச்சி சொல்லி புரியவைக்க முடையத சந்தோஷம் அவனுக்கு ஏற்பட்டது. இவனை வளர்த்த வீட்டைக் கவனித்தான். அதில் அடைங்கியுள்ள ஒவ்வொரு இடமும் தன் கதையை கவிதைப் போல் அவனுக்கு நினைவுட்டி மகிழ்ந்தன. திருட்டுத்தனமாக தன் அண்ணனுடனும் தங்கையுடனும் நல்லிரவில் பேய் படம் பார்த்தது, 'சொபாவில் அழுது அழுது கண்ணம் சிவக்க அங்கேயே தூங்விட்ட நினைவுகள் அவன் மனத்திரையில் போடிப்போட்டுக்கொண்டு மறு ஒலிபரப்பகின.வாழ்வில் சலித்து போகாதது வீடு மட்டுமே என்று தனக்குள் எண்ணினான். அது உண்மைதானே, வேளை, வேலை, பொழுதுப்போக்கு , பணம் இவை எல்லாம் எதோ ஒரு வகையில் சலித்து போகக்கூடியவை தானே.கைகால் கருவிக்கொண்டு சாப்பிட தாயரானான். சாப்பிடும் போது அவனால் தன் அம்மா கூறுவதைக் கவனிக்க முடியவில்லை. அவன் கவனம் எங்கோ மிதந்துக் கொண்டிருந்தது. அவன் வீட்டில் மாட்டப்பட்டிருந்த படங்களை கவனித்தான். எல்லாப்படகளும் அவன் அண்ணன் வரைந்தவைதான். அண்ணன் பல்கழைகழகத்தில் ஒவியம் வரையும் வகுப்பில் இருந்தான் சாகரின் அப்பாகூட சின்ன வயதில் ஒவியம் வரைந்தவர் தான்.ஆனால் ஏனோ அதை அவர் தொழிலாக மாற்றிக்கொல்லவில்லை. ஒவியங்களில் புரியாத முகங்களின் அசைவுகள் வரையப்பட்டிருந்தன.புரியாத பிம்பங்களில் கலை ரசனை எப்படி அடங்கியுள்ளது? 'மோடர்ன் அர்ட்' என்று புரியாத கிறுக்குகளுக்கு வண்ணம் பூசி அவற்றிற்கு உயிர் ஊட்டியிருந்த அண்ணன், சாகரின் கன்னுக்கு முட்டளாய் தோன்றினான். அனால் உண்மையில்லை சாகர் தன் அண்ணனைப் பார்த்து பொராமைக் கொண்டான். ஒவியங்களை கண்டு ரசித்தகண்கள் ஏன் நல்ல காற்ப்பந்து வீரரை போற்ற மறுத்தது? தீடீர்ரென்று அம்மவைப் பார்த்து, 'அம்மா உனக்கு என்னைப் பிடிக்குமா,அண்ணனை பிடிக்குமா?' என்று அரைகிண்டலுடன் கேட்டான். உன் அண்ணன் வீட்டை தாங்கி நிற்கும் கம்பிகள் போல முதலில் வந்தவன். நீ வீட்டை பலப்படுத்தி நிற்கும் செங்கல் போன்றவன். இருவரும் இல்லாமல் இந்த வீடா?' என்று விளக்கினார் அம்மா.சாகருக்கு புரிந்தும் புரியததுப்போல் இருந்தது. ஆனால் அவன் மனம் லேசானது.
Subscribe to:
Post Comments (Atom)

எல்லோரும் உலகில் ஒரு வகையில் முக்கியமானவர்கள்தான்.சிலர் வெளிப்படையாக்த் தெரிவார்கள். சிலர் உள்ளீடாக இருந்து வலுச் சேர்ப்பார்கள். இந்த உண்மையை நயமாகச் சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteஎழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்துங்கள்
அன்புடன்
மாலன்
நன்றி. அடுத்த கதைகளில் பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்.
ReplyDelete