Monday, May 10, 2010

என் அருகில் இருந்துக்கொண்டே
















This was written for Mothers day (9th May 2010)


என் அருகில் இருந்துக்கொண்டே


தியாகி என்றோ,
கடவுள் என்றோ
அதற்கும் மேலே என்றோ
இவ்வுலகம் முழுவதும் உனக்கு பெயர் உண்டு
ஆனால் அம்மா
நீ எனக்கு
என் இரு கைகள் போல!
கைகொடுப்பாய்
என் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்துக்கொண்டே

உன் அருகில் இருந்துக்கொண்டே
பசி தூக்கம் மறந்து
உன் மடியில் படுத்து
விடிகிறன என்னுடைய
குழந்தை பருவத்தின் காலைகள்
இனியும் விடியும்
இதற்கு பிறகு வரக்கூடிய
இனிய பருவத்தின் காலைகளும்

Sunday, May 2, 2010

இதயம்

இரண்டு இதயம் தருவாயா
என் சொகங்களை ஒன்றில் பூட்ட
என் மகிழ்ச்சியை ஒன்றில் ஊட்ட
இரு இதயம் தந்தால்
புயலிலும் விளையாடுவேன்
அத்தைரியத்துடன்
மனதை அலைபாய விடுவேனே
இன்னொரு இதயம் என்னை தாங்கிக்கொள்ளும் என்ற
ஆதங்கத்தில் வாழ்க்கையைப் பார்த்து
அஞ்சி ஒளியமாட்டேன் மாறாதது
இரு இதயங்கள் இருக்கிறதென்ற அலட்சியத்தில்
ஒரு இதயம் படும் வேதனை
இரு இதயம் இருந்திருந்தால் இரு மடங்கு கூடதா?
இதற்கு பதில் கூறுவதற்கு யாரும் வருவதுன்டா?